வீடு
கலைச்செல்வி ”ஏங்க.. கீழ வர்றீங்களா.. மணி பத்தாச்சு.. துாக்கம் சொக்குது..” என் மனைவியிடமிருந்து இது மூன்றாவது அழைப்பு. ஒரு வார காலமாக ஊர் பரபரத்துக் கிடந்ததில் யாருக்குமே நிம்மதியான துாக்கம்...
View Articleகாலச்சுனை
சங்கர நாராயணன் வீடு மாறும் தோறும் தங்கிவிடுகின்றன தாபத்தின் நிழல்கள் பால்யத்தில் குடியிருந்த வீடுகள் பார்ப்பதற்கே அச்சமாக இருக்கின்றன வடக்குரத வீதிக்குச் நேற்று சென்றேன் அவளுக்காக நான் பிதற்றிய...
View Articleகவியின் கண்- முதியோர் இல்லம்
எஸ். சுரேஷ் முதியோர் இல்லம் – விஸ்லாவா சிம்போர்ஸ்கா இதோ வந்துவிட்டார் மகாராணி- நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். ராங்கிக்காரி நம் ஹெலன், முதலில் அவளை யார் ராணியாக்கியது!...
View ArticleIan McEwan – On Chesil Beach –நேசத்தின் விலை
அஜய் ஆர் திருமணம் முடித்த கையோடு தேனிலவு கொண்டாட கடலோர விடுதிக்கு வந்திருக்கும் இளம் தம்பதியரான எட்வர்ட் (Edward)/ ப்ளாரன்ஸ் (Florence) இரவு உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். தேனிலவு அறையின் நிசப்தம்,...
View Articleமொட்டை மரம்
ஐ.பி.கு. டேவிட் இலை துறந்த துறவியாய் வானோக்கி மெய்வாழ்வு வேண்டி தவமிருந்து விரித்த கைகளாய் நிற்கும் நான் மொட்டை மரமாம்! ஓர் விதையில் முளைத்த பெருங்குடையாய் நான் தந்த நிழல் எங்கே? தென்றலின் தழுவலுக்கு...
View Articleஒற்றைப் பூ
சரவணன் அபி மகிழ மரத்தினின்று பூக்கள் உதிர்வது போல் கிரணங்கள் அறைக்குள் பெய்து கொண்டிருக்கின்றன மௌனம் காத்திருந்த நம்மிருவரிடயே இசை பேசிக் கொண்டிருந்தது மெல்லிய ஆவிபுகையும் தேநீர்க்கோப்பையை...
View Article‘நவீன தேவதைக் கதைகள் 2 –ஆஞ்செலா கார்டரின் ‘The Bloody Chamber’சிறுகதைத்...
அஜய் ஆர் இளவரசியால் முத்தமிடப்பட்ட தவளையும் (‘Frog Prince‘ கதையின் மூலப் பிரதியில் இளவரசி தவளையை தூக்கி எறிவதாக வருகிறது), அழகியின் கண்ணீரில் நனையும் Beastம் ராஜகுமாரனாக தங்கள் நிஜ உருவைப்...
View Articleதற்கொலைக் குறிப்பு
நம்பி கிருஷ்ணன் அமைதியான, குளிர்ந்த நீரின் முகம் என்னிடம் கேட்டது ஒரு முத்தத்தை. (Suicide’s Notes, என்ற Langston Hughes கவிதையின் தமிழாக்கம்)Filed under: எழுத்து, கவிதை, நம்பி கிருஷ்ணன், மொழியாக்கம்
View Articleமுறுக்கு
மு வெங்கடேஷ் அன்று நான் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னை அன்போடு அழைத்த அம்மா, “ஏல ராசா நாம இன்னைக்குப் படத்துக்குப் போகலாம்டா” என்றாள். எனக்கு அம்மாவோடு படத்துக்குப் போகப் பிடிக்காது....
View Articleகொலை இயந்திரம்
– நரோபா போட்டிருக்கும் சட்டையை முதலில் கழட்ட வேண்டும் கசங்கி இருந்தாலும் பரவாயில்லை, ஈரத்தில் ஒட்டியிருந்தாலும் கூட, காயும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. கிழித்தாவது எறியத்தான் வேண்டும். ஆனால் வேறு...
View ArticlePebbles. Shingles. கூழாங்கற்கள். சிதைகற்கள்.- மாத்யூ அர்னால்டின் டோவர் பீச்.
பதாகையில், “பூமணியின் அஞ்ஞாடி- இருட்டில் நிகழும் மோதல்கள்” என்றொரு கட்டுரை இரு பகுதிகளாக பதிப்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில், “Clashing by night,” என்ற தலைப்பில் The Caravan என்ற இதழில் என்.. கல்யாணராமன்...
View Articleவேண்டுதல்கள்
காஸ்மிக் தூசி கடிகாரத்தின் முன் ஒரு கிடா வெட்டலாம் தண்டவாளதின் மேல் தேங்காய் உடைக்கலாம் கைகாட்டிக்கு சேவலின் இரத்தம் பூசலாம். ஸ்டேஷன் மாஸ்டருக்கு பாலாபிஷேகமும் முன்பதிவு செய்யும் குமாஸ்தாவுக்கு...
View Articleகார்ல் ஓவ் நாஸ்கார்டுடன் ஒரு நேர்முகம் –மெடயா ஓகர்
உங்கள் தொடர் நாவல்கள் பற்றி அறிந்திராத வாசர்களுக்காக, இதெல்லாம் எப்படி துவங்கியது, என்பதைச் உருவானது என்று சொல்ல முடியுமா? சரி, நினைத்துப் பார்த்தல் என்றும் மீண்டும் கட்டியெழுப்புதல் என்றும் இதைச்...
View Articleமறையும் கதிரவன்
காஸ்மிக் தூசி தீர்க்க தரிசனத்தைப்போல நீளும் தண்டவாளங்கள் சந்திப்பதுபோல தோன்றும் அடிவானத்தின் இடத்தை தொட்டுவிட்டான் மறையும் கதிரவன். சக்கரத்தைப் போன்ற பெரிய கதிரவன். 00 அருண் கொலாட்கர் எழுதிய The...
View Articleதண்டவாளம் ஒன்று தடம் புரண்டது
மு வெங்கடேஷ் தற்போது பெய்து வரும் கனமழை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை ஞாபகப்படுத்துகின்றது, எனக்கும்தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள...
View Articleபன்முகப்பட்ட வாசிப்பு சாத்தியங்கள் – Brooklyn novel / Colm Toibin
– அஜய் ஆர். – ஒரு இளம் பெண் அயர்லாந்திலிருந்து வேலைக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறாள். அங்கு தனிமையில் வாடுகிறாள். ஒரு இளைஞனை அவள் சந்திக்க, அவர்களுக்குள் மெல்ல ஒரு உறவு உறவாகும்போது மீண்டும் தாய் நாடு...
View Articleஊழ்
தி வேல்முருகன் அப்போது செட்டியார் வீட்டு வேலை நடந்து கொண்டு இருந்தது. இவனது மேற்பார்வையில். முகப்பில் போர்ச்சும், இரண்டு மாஸ்டர் பெட்ரூமும், ஹால், டைனிங் ஹால், கிச்சன், சிட் அவுட் பின்னால்...
View Articleஇருமொழிக் கவிதைகள் 4- ஜெல்லி மீனே ஜெல்லி மீனே
– தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) – ஜெல்லி மீனே ஜெல்லி மீனே: என் கண்களை நழுவ விடுகிறேன் என் காதுகளை உதிர்க்கிறேன் மறையச் செய்கிறேன் என் நாசியை இப்போது மிஞ்சி நிற்கிறேன் வாயும் வயிறுமாய் மெல்ல நகர்ந்து...
View Articleஇருமொழிக் கவிதைகள் 2- கடைசியாக எப்பொழுது
– தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) – கடைசியாக எப்பொழுது தண்ணீர் குடித்தாய் அதைத் தொடும்போழுதும் தூக்கும்போழுதும் செல்லமகளைப்போல் கூட வந்ததா தண்ணீரில் வானவெளியென நீ நுழைகையில் அது குதித்துக்...
View Article