Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

காலச்சுனை

$
0
0

சங்கர நாராயணன்

வீடு மாறும் தோறும் தங்கிவிடுகின்றன
தாபத்தின் நிழல்கள்
பால்யத்தில் குடியிருந்த வீடுகள்
பார்ப்பதற்கே அச்சமாக இருக்கின்றன
வடக்குரத வீதிக்குச் நேற்று சென்றேன்
அவளுக்காக நான் பிதற்றிய வார்த்தைகள்
பல்கிப்பெருகி பித்தேறிய கண்களுடன் அலைகின்றன
அவ்வீட்டின் உள்ளறைகளில்
உள்ளங்கையில் குளம் தோண்டி
நான் புதைத்த குழந்தைகளின் பேரோலம்
எத்தனை முயன்றும்
காணமுடியவில்லை
நான் வாழ்ந்த வீட்டினை
கால்முளைத்து நடந்து செல்லும் வீடுகளில்
பறக்கத் துடிக்கின்றன வேட்கைப்புறாக்கள்
இடையறா வாசத்தில்
அறைகளின் சுவர்களில் படிந்துள்ளன
மனித இச்சைகளின் பாசிப்படலம்
கடந்துசெல்லும் வீடுகள் கூட்டிவருகின்றன
கடக்க இயலா காலத்தின் சுமையை


Filed under: கவிதை, சங்கர நாராயணன், சங்கர நாராயணன்

Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!