Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

ஒற்றைப் பூ

$
0
0

சரவணன் அபி

மகிழ மரத்தினின்று
பூக்கள் உதிர்வது போல்
கிரணங்கள்
அறைக்குள்
பெய்து கொண்டிருக்கின்றன

மௌனம் காத்திருந்த
நம்மிருவரிடயே
இசை பேசிக் கொண்டிருந்தது

மெல்லிய
ஆவிபுகையும்
தேநீர்க்கோப்பையை
உறிஞ்சிவிட்டு
என்னைப் பார்க்கிறாய்

புலர்வெயிலின்
இளவெம்மையுடன்
மெதுமெதுவே
மஞ்சள் மாறும்
அறையின் பரிமாணங்களை
ஹரி பிரசாதின் குழலிசை
நிறைக்கிறது

தோடி ராகந்தானே
என வினவுகிறேன்
தலையசைக்கிறாய்
செவிமடல் பொதிந்த
அணிகள் ஆடுகின்றன
வர்ணங்களை வாரியிறைத்தபடி

என்னுள்ளும்
பொன்னிழைகளாய் மின்னும்
காதோர குழற்கற்றைகளை

ஒதுக்கிவிட
தவிக்கும் என் விரல்களின்
தகிப்பை
ஏன் மறைக்க வேண்டும்
என எண்ணுகிறேன்

உன் இதழில் இருந்து
முறுவலொன்று
நழுவிச் சிந்துகிறது

வெளியே
வெட்கமின்றி
பூக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன


Filed under: எழுத்து, கவிதை, சரவணன் அபி

Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!