சதாப்தி ரயில் விட்டு இறங்கியவுடன்
வெம்மை தாக்குகிறது
தலை மேல் இரண்டு பெட்டிகளையும்
தோளில் ஒரு பையும் சுமந்து கொண்டு
கூலி நடக்கிறான்
பிதுங்கி வழியும் கூட்டத்தைச் சுமந்து கொண்டு
உச்சி வெயிலில் ஊர்ந்து செல்கிறது
ஒரு பஸ்
நடுரோட்டில் இரண்டு வயோதிக பெண்மணிகள்
சுவாரஸ்யமாய் எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்
தவற விட்ட பஸ்ஸைப் பிடிக்க
வேகமாக ஓடுகிறான் ஒருவன்
ஒற்றை வியர்வைத் துளி காதோரத்தில் வழிய
ரயில் நிலைய முகப்புக் கூரையின் கீழ்
காருக்காக காத்திருக்கிறேன் நான்.
Filed under: எழுத்து, கவிதை, சிகந்தர்வாசி
