நீர்தேடி
வேர் நீளும்
ஒளி யாசித்து
மரமேறும்
சந்ததி நீள
விழுதிறங்கும்
நீரின்றி கருகினாலும்
ஒரு துளி விழலை
நினைவிற் பொதித்து
பெருகிக் கொள்ளும்
போர்த்திப் புரந்து
புரண்டு கொடுத்து
கலைந்து தாங்கி
கிளைத்து எழுந்து
உழைப்பொன்றே கருதி
உயிரீயும்
மகிழ்வொன்றே கருதும்
மரகதம்
Filed under: எழுத்து, கவிதை, சரவணன் அபி
