Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

காலமருள் –சரவணன் அபி

$
0
0

சரவணன் அபி

இலைகள் விழுந்து சருகாவதிலும் 
சருகாகி காற்றில் வீழ்வதிலும் 
நியதிகள் எங்கும் மீறப்படாதபோது 

கதிர்க்கற்றைகள் நிறம் தேய்ந்து
சுடர்  அடங்கி அணைந்தாலும் 
ஒற்றை விளக்கின் திரியிழுத்து 
இருளின் கருமையில்  இணைந்தாலும் 
புலரியின் பொலிவு குறைபடாதபோது 

சொற்களின் குறைவில் பிறந்தாலும்  
மிகுசொல் சேர்ந்து நிறைந்தாலும் 
கவிகளின் வீச்சு கறைபடாதபோது 

அலை வீசி ஆர்ப்பரித்து
கரை தாண்டி சென்றாலும் 
கால்தடவி கலம்தாங்கி 
கட்டுக்குள் நின்றாலும் 
ஆழியின் அற்புதம் புரிபடாதபோது

அனைத்தும் ருசிக்க
அனைத்தும் புரிய
அனைத்திலும் இழுபட
அனைத்திலும் இழிபட

நான் 
காத்திருப்பதில் தவறென்ன?

Filed under: எழுத்து, கவிதை, சரவணன் அபி Tagged: கவிதை, சரவணன் அபி

Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!