காமப்பெருங்குன்றின் முகட்டில்
வசிக்கின்றவன்
முகர்கின்றான்
கேட்கின்றான்
மல்லாந்து கிடக்கின்றான்
உரையாடுகின்றான்
…
வியர்க்கின்றான்
இறங்கி நிற்கின்றான்
கண்ணிமைக்கின்றான்
அவன் காதற்பள்ளத்தாக்கினுள்
எப்போதைக்குமாக
இறங்கிக்கொண்டிருக்கின்றான்
அக்காதற்பள்ளத்தாக்கினடியில்
வசிக்கின்றவள்
…
குப்புறக் கிடக்கின்றாள்
உரையாடுகின்றாள்
மூச்சிழுக்கின்றாள்
மெல்ல முயங்குகின்றாள்
மூச்சிரைக்கின்றாள்
வியர்க்கின்றாள்
கண்ணிமைக்கின்றாள்
எழுந்து நிற்கின்றாள்
அவள் அக்காமப்பெருங்குன்றின் முகட்டுக்கு
எப்போதைக்குமாக
ஏறிக்கொண்டிருக்கின்றாள்
Filed under: ஆகி, எழுத்து, கவிதை
