– ஸ்ரீதர் நாராயணன் –
மென்மயிர் சுருள் தோலென
ஓரத்தில் பூனையெனக் கிடக்கிறது.
வாஞ்சையுடன் எடுத்து
கதகதப்பு கொடுத்தபடி
தடவிக் கொஞ்சுகிறேன்..
மின்கண்கள் சுடர்விட
ஒற்றைக் காதை
தூக்கி உற்றுப் பார்க்கிறது.
வருடிக் கொடுக்க கொடுக்க
வளர்ந்து பெருகி
கைகளை நிறைக்கிறது.
பரிணாமப் பாய்ச்சலுக்கான
தழலை தலையில் தாங்கியபடி
செருக்குடன் நடந்து செல்கிறது
புலி ஒன்று.
Filed under: எழுத்து, கவிதை, ஸ்ரீதர் நாராயணன்
