இன்று என் படுக்கையில் ஒரு ஆண் வேண்டும். பல நாட்கள் ஆகிவிட்டது. முற்றிலும் அந்நியரான உங்களிடம் இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. பழகியவர்களிடம் இத்தனை வெளிப்படையாய் பேச முடியாது.
நான் லின்சி, எனக்கு முப்பது வயதாகிறது, லண்டனில் ஒரு பிரபலமான வங்கியில் மென்பொருள் குழு மேலாளர் பணி. ஸ்டுவேர்ட் முறித்து கொண்டு போகும் வரை என் வாழ்வில் வெகு சில ஆண்களே இருந்தனர். என் தந்தை, அண்ணன், என் பள்ளி கால ஆண் தோழன் பென், கல்லூரி கால துணைவன் காரி, பிறகு ஸ்டுவேர்ட்.
ஸ்டுவேர்ட்டை காதலித்து தொலைத்து விட்டேன் . அழுது, கதறி புலம்பி, குடித்து , உண்டு ஒரு வழியாய் அவனை மறந்து வெளி வரும் போது ஒரு வருடம் கடந்து, இருபது கிலோ எடை கூடி ஆண்கள் வெறும் ஹாயுடன் அவசரமாக கடந்து செல்லும் பெண்ணாகிவிட்டேன்.
ஸ்டுவேர்ட்டை மறந்தாலும் அவன் விட்டு சென்ற கசப்பை என்னால் மறக்க முடியவில்லை. இந்த ஆண்களுக்கு மூளையற்ற மேனாமினுக்கிகள்தான் வேண்டும், அவர்கள் சொல்லும் சகிக்க முடியாத நகைச்சுவைக்கு சிரித்து, அவர்கள் விடும் கதைகளை நம்பிக் கொண்டு…
ஸ்டுவேர்ட்டும் ஒரு மேனாமினுக்கி பின்னால்தான் ஓடினான். ஆபாசமாய் அவனை திட்ட தோன்றுகிறது, இத்துடன் அவனை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்கிறேன், இல்லாவிட்டால் உங்கள் முன் இழிசொல் சொல்லி என் மதிப்பை இழக்க வேண்டியிருக்கும்.
இனி ஒரு ஆணை என்னால் காதலிக்க முடியாது. ஆனால் , ஆணின் உடல் எனக்களிக்கும் உவகை சொல்லில் அடங்காதது. என் அலுவலகத்தில் என் பெயர் ஆணுண்ணி. நான் வேலை பார்க்கும் இடத்தில் நான் துய்க்காத ஆணுடல் அநேகமாக இல்லை, ஒரு பாலர் சிலரை தவிர.
நான் ஓரிரு முறைகளுக்கு மேல் ஒரே ஆணுடலை உபயோகிப்பதில்லை, விலகி விடுவேன்.எந்த நிபந்தனைகளும் பாசாங்குகளும் இல்லாத அதி தூய ஊண் களியாட்டு மட்டுமே என்பதால் இதுவரை எனது ஊண் கொள்முதலுக்கு எந்த குறையும் இருந்ததில்லை. இலவசமாய் ,ஓரிரவுக்கு மட்டும் ,எந்த பின் விளைவுகளும் அற்ற ஓர் பெண்ணுடல் துய்ப்பை அவள் பேரிக்காய் போன்ற உடல்கட்டுடன் இருந்தாலும் எந்த ஆணும் மறுப்பதில்லை, அவளுடன் அன்றாடம் வாழத்தான் அவர்களால் முடிவதில்லை. அந்த ஓரிரவில் நான்தான் அவர்களுக்கு தேவதை. ஒவ்வொரு இரவும் நான் ஒரு தேவதை.., ஆஹா! எப்பொழுது நினைத்தாலும் கிறங்கச் செய்யும் எண்ணம்.
பல நிறம், பல இனம், பல நீள அகலங்களில் மூழ்கி களித்தும் தீரா பித்து இது. அவ்வளவு விரைவில் இது தீர்ந்து விடக்கூடாது என்பதே என் பிரார்த்தனை.
சரி இன்றைய விஷயத்திற்கு வருவோம். ஒரு மாதமாக இரவு பகலாக வேலை. கடினமானதொரு மென்பொருள் ஆக்கத்தை எனது குழு இந்தியாவில் இருந்து வந்திருந்த மற்றொரு குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக வடிவமைத்து , நேற்று பயணர் உபயோகத்திற்கு வெளியிட்டாயிற்று. இன்று அதை கொண்டாட ஒரு மது விருந்து. அதற்காகவே இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன்.
இந்திய குழுவின் மேலாளனும் ஒரு இந்தியன்.இந்தியனாய் இருந்தாலும் என்னுடய காக்னி நகைச்சுவைகளை கூட புரிந்து கொண்டு ரசிக்கும் அளவுக்கு இங்கிலாந்துடன் பரிச்சியம் உடையவன். இந்த ஒரு மாதத்தில் இருவரும் ஒன்றாக மதிய உணவுக்கு செல்லும் அளவுக்கு நெருங்கிவிட்டோம். இன்றைய இரவை அவனோடு கழிக்கலாமென்றிருக்கிறேன். இந்த கறுப்பு நிற கையற்ற , முட்டியுயர சாடின் கவுனை அவனுக்காகவே அணிந்துள்ளேன்.
என் மார்பக பிளவை மிக எடுப்பாக வெளிக்காட்டும் வி வடிவ மேல் வெட்டை கவனியுங்கள்.
நான் அறிந்த வரையில் இந்தியர்களுக்கு பெண் மார்பின் மேல் ஒரு பெரிய மோகம், இந்த கவுன் மார்பை முன்னிலை படுத்துவதிற்கு உகந்தது. அது என்னவோ ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு அங்கத்தின் மேல் ஒரு மோகம் , வெள்ளையர்களுக்கு நீண்ட கால்களின் மேல், கருப்பர்களுக்கு உருண்டு திரண்ட பின் பக்கத்தின் மேல். விதிவிலக்காக ஒருவனைக் கூட நான் கண்டதில்லை. பழுப்பு நிறத்தில் , வெள்ளை நிற சட்டையும் , அடர்நீல நிற பாண்ட்டும் அணிந்து கையில் பியர் பைண்டுடன் உயரமாக வருபவன் தான் என்னுடைய இன்றிரவுக்கான நிகழ்ச்சி நிரல்.
“என்ன எஸெக்ஸ் பெண்ணே மதியத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டாயா?” என்றான் என்னருகில் அமர்ந்தபடி .
“சேம்பெயினை காலை உணவுடன் பரிமாறினாலும் நான் குடிப்பேன், இப்பொழுது தான் மூன்றாவது கோப்பை. இன்று அனைத்தையும் நிதானமாய் அனுபவித்து செய்வதாய் உத்தேசம்” என்றேன் கண் சிமிட்டியபடி.
அவன் கையில் இருந்த லாகர் பியரை ஒரு மிடறு விழுங்கிவிட்டு, என்னை நோக்கி புன்னகைத்தான். “உன் உதவிகள் அனைத்திற்கும் மிக்க நன்றி, நீ இல்லாவிட்டால் எப்படி இதை முடித்து கொடுத்திருப்பேனென்றே தெரியவில்லை” என்றேன்.
“இந்த உடையில் நீ வழக்கத்தைவிட அழகாக இருக்கிறாய்”, அவன் பார்வை இன்னும் என் கண்களில் தான் நிலைத்திருந்தது. நான் பேச்சை மடை மாற்றியது அவனுக்கு பிடிக்கவில்லை, சிரித்துக்கொண்டேன்.
குழுவினர் எங்கள் மேஜையில் ஒவ்வொருவராய் வந்து குழுமினர். நான் இன்னும் சற்று நெருங்கி அமர்ந்தேன். பல பேச்சுக்கள், வெடிச்சிரிப்புகள் இன்னும் பல குவளை செம்பெயினுடன் இரவு என்னுள் வெதுவெதுப்பாய் படர்ந்திறங்கியது.
பாரில் இப்போது நிற்க இடமில்லாதளவிற்கு கூட்டம்.
பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் காதில் சொன்னால்தான் அவருக்கு கேட்குமளவுக்கு இரைச்சல்.
நான் அவன் மேல் என் உடல் படர சாய்ந்து அவன் காதுக்குள் “என்னைப் பிடித்திருக்கிறதா” என்றேன். என் மூச்சு அவன் கன்னங்களில் பட்டு சூடாக என் முகத்தின் மேல் பொழிந்தது. அவன் புஜங்களில் என் இடது மார்பு அழுந்திக்கொண்டிருந்தது. அவன் என் பக்கம் திரும்பாமல் புன்னகையுடன் “நீ என்ன நினைக்கிறாய்” என்றுவிட்டு ஒரு மிடறு பீரை வாயில் விட்டுக்கொண்டான். சிறு சிணுங்கலுடன் “நீ சொல்” என்றேன். என்னைப்பார்த்து முன்னால் இருப்பவர்களை நோக்கி கண் காட்டினான். “வா, ஆடுவோம்” என்று சொல்லி எழுந்து என் கையை பற்றினான், நான் என் விரல்களை அவன் விரல்களில் பின்னிக்கொண்டேன்.
இருவரும் நடன அரங்கின் கூட்டத்திற்குள் நுழைந்தோம். அவன் இடது கையால் என் இடையை சுற்றி பிடித்தான் , அவன் கண்கள் என் ஆடையின் வி வெட்டு பிளவில் நிலைத்திருக்க மெதுவாக
சில நிமிடங்கள் ஆடிக்கொண்டிருந்தோம்.
“நீ இன்னும் பதில் சொல்லவில்லை”
“நான் பிடிக்காதவர்களின் முலைகளைப் பார்ப்பதில்லை” சொல்லிவிட்டு அவன் மூக்கால் என் மூக்கை உரசினான். நான் வெடிச்சிரிப்பை உதிர்த்துவிட்டு என் மூக்கால் அவன் மார்பை செல்லமாய் முட்டினேன். அவன் கையை விட்டு விட்டு “நான் காதலில் விழுந்தேன்” என்று பாடிக்கொண்டு குதித்தேன். மீண்டும் என் இடையை வளைத்து இழுத்தான். நான் தவ்வி அவன் உதட்டை கவ்வினேன். அவன் சற்று தயங்கிவிட்டு என் மேலுதட்டில் அவன் நாவால் நீவினான். அவன் நாவை என் பற்களால் மெல்ல என் வாய்க்குள் இழுத்தேன். அவன் இதழ்கள் என் உமிழ் நீரை சுவைக்க தொடங்கியது. என் கண்கள் கிறங்க , இதயம் படபடக்க , கால்கள் நிலையிழக்க அவன் இதழ்களையும், நாவையும் சுவைத்தேன். சிறிது நேரம் கழித்து அவன் இதழ்களை பிரித்தெடுத்துவிட்டு என்னை வாஞ்சையோடு பார்த்தான். எனக்கு அங்கேயே ஆடை கலைந்து உறவு கொள்ள வேண்டும் போல் இருந்தது.
“என் வீட்டிற்கு போவோமா” என்றேன் குளறலாக.
“இன்று மட்டுமா இல்லை என்றென்றுக்குமா” அவன் பார்வையில் குறும்பிருந்தது.
“என்றன்றைக்கும்” என்றேன் பலமாக சிரித்தபடி.
“உன் என்றன்றைக்கும் பனிரெண்டு மணி நேர ஆயுள் மட்டுமே கொண்டது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது” இப்பொழுதும் அவன் கண்கள் சிரித்து கொண்டிருந்தது, ஆனால் அதில் ஒரு சிறு கத்தி சொறுகி வைக்கப்பட்டது போல் என்னுள் ஒரு வலி.
அவன் கண்ணை தவிர்க்க அவன் மார்பில் தலை புதைத்தேன்.
என் தலையில் அவன் மென்மையாய் முத்தமிடுவதை உணர்ந்தேன்.
என் மோவாயை பற்றி என் முகத்தை தூக்கி என் இதழ்களில் முத்தமிட்டான். நான் கல் போல் கண் மூடி நின்றிருந்தேன். நான் அம்முத்தத்தில் இல்லை என அறிந்து இதழ் விலக்கினான்.
“எனக்கு ஒரு நாள் போதாது” என்றான், இப்பொழுது அவனிடம் துளியும் சிரிப்பில்லை.
” கால் வலிக்கிறது, போய் அமர்வோம்” அவனை இழுத்துக்கொண்டு எங்கள் மேஜைக்கு சென்றேன்.
“நல்ல ஆட்டமா லின்சி” என்றான் தரச்சோதனை குழுவின் தலைவன் க்றிஸ், இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டியபடி.
“ஆம், பாதி எடை குறைந்துவிட்டது” என்றேன்.சத்தம் போட்டு போலிச்சிரிப்பொன்றை உதிர்த்தான், நல்ல போதையில் இருந்தான்.மேலே எதுவும் பேசாமல் மேஜையில் சென்று அமர்ந்தேன்.
சிறிது நேரம் மற்றவர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தேன்.
என் இந்தியன் அனைவருக்கும் அடுத்த ரவுண்ட் மது வாங்க பாரை நோக்கி நடந்தான்.அவனையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் , ஒரு சிந்தனையும் இல்லாமல்.
என்னையறியாமல் ஒரு கசப்பு என்னுள் எழுந்தது. என் முன்னால் மேஜை மேல் ஒரு குவளை செம்பெயின் இருந்தது, அதை கையில் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றேன். என் வி விடிவ வெட்டிற்குள் குவளையின் வாயை நுழைத்து , நிதானமாக ஊற்றினேன். முற்றிலும் கவிழ்த்து விட்டு அதை மேஜை மேல் வைத்தேன். நாடக பாணியில் யானை தும்பிக்கை தூக்குவது போல் நெற்றியில் கை வைத்து உரக்க ” ஓ! ஓஹோ! என் முலைகளுடன் என் ஆடையும் நனைந்துவிட்டதே, யாராவது ஒரு கணவான் தயை கூர்ந்து என் மேல் கைப்படாமல் சுத்தம் செய்ய முடியுமா” என்றேன்.
சிலர் அடக்க மாட்டாத சிரிப்புடனும், சிலர் அதிர்ச்சியில் வாய் பிளந்தும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
க்றிஸ் எழுந்தான். அவனும் நாடக பாணியில் இரு கைகளையும் விரித்து ” லின்சி , என்றும் உன் சேவையில்” என்று கத்திக்கொண்டு மேஜையை சுற்றி ஓடி என் அருகில் வந்து நின்றான்.
நான் திரும்பி என் முலைகளை நிமிர்த்திக் காட்டி ” தொடங்குங்கள் உங்கள் சேவையை கணவானே” என்றேன்.
க்றிஸ் தன் கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு நாவை என் மார்பிளவிற்குள் விட்டு துப்புரவாய் சுத்தம் செய்ய தொடங்கினான்.
Filed under: எழுத்து, சிறுகதை, தன்ராஜ் மணி
