ஆநிரை கவர்தலில்லை
களவு மணமுமில்லை
உடன்போகிய
பழங்குடித் தலைவனின்
பழங்குடி மகள்
கொண்டவனைக் கொன்ற
இயலும் துறையும்
அறியா
பண்டை மொழி
பண்பட்ட நிலம்
தன் புண்ணரிந்து
தான் நிலையழிவது
போலும்
மகளை எரிப்பதும் கரு
மகவை அறுப்பதும்
மூத்த பழங்குடி
முந்தைய மரபின்
ஏதோவோர்
எச்சம் இதுவெனில்
திருத்தமும்
அத்தன்மையதாய் தானே
இருத்தல் கூடும்
Filed under: எழுத்து, கவிதை, சரவணன் அபி
